தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 இன் கீழ் - பணியின் பெயர் - மதுரை கொச்சின் சாலை முதல் வாசிநகர் சாலை கி மீ. O/0 - 2/500 வரை தரம் உயர்த்துதல் 2.5 கிலோமீட்டர் மதிப்பீட்டுத் தொகை 254.30 லட்சம் - தொடர்பான சில தகவல்கள் கோருதல்.
1. மேற்கண்ட சாலை பணியின் (estimate)மதிப்பீட்டு நகலினை வழங்கவும்
2. மேற்கண்ட சாலை தரம் உயர்த்துதல் பணியில் 0/0 கிலோமீட்டரில் அமைத்துள்ள சிறு பாலம் (culvert) இருபுறமும் தடுப்பு சுவர்கள் இன்றி அமைந்துள்ளது இதனை சரிசெய்திட மதிப்பீட்டில் ஏதேனும் வழிவகை செய்யப்பட்டுள்ளதா அல்லது இல்லையா என்ற விவரத்தினை வழங்கவும்
3. மேற்கண்ட சாலை பணியில் புதிய சாலைகளை அமைக்கும்போது பழைய சாலைகளை தேவைப்படும் அளவிற்கு வெட்டி எடுக்கும் பணி முதற்கட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற விதி மதிப்பீட்டில் சேர்க்கப்பட்டு முறையாக பின்பற்றப்பட்டுள்ளது ஆம் எனில் பழைய சாலைகளை வெட்டி எடுக்கப்பட்டு பிறகு அளவீடுகள் மற்றும் மேல் அளவீடுகள் (measurementes & check measurements) செய்த பொறியாளர்களின் பெயர் மற்றும் பதவிகளை குறிப்பிடவும்
மேற்கண்ட தகவல்களின் நகலினை பெறுவதற்காக கட்டணம் ஏதேனும் செலுத்த வேண்டுமெனில் கட்டணம் செலுத்த தயாராக உள்ளேன் என்ற விவரத்தினை தெரிவித்துக் கொள்கிறேன்
நாங்கள் செட்டியபட்டியை சுற்றியுள்ள 8 கிராமங்களில் (நோட்டம்பட்டி, குன்னூத்துப்பட்டி, வாசிநகர், குறிஞ்சிநகர், ஸ்ரீரங்கபுரம், சேர்வை பட்டி, நடுப்பட்டி, அண்ணாநகர்) வாழ்ந்து வருகிறோம் எங்கள் கிராமம் புவியியல் ரீதியாக மதுரை மற்றும் தேனி மாவட்ட எல்லையான ஆண்டிபட்டி கணவாய் மலை சரிவு பகுதியில் 1km தொலைவிற்குள் அமைந்துள்ளது. செட்டியபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள 8 கிராமங்கள் இயற்கையாகவே NH85 தேசிய நெடுஞ்சாலைக்கு தெற்கில் 4 கிராமம் வடக்கில் 4 கிராமம் என பிரிந்தும் அமைந்துள்ளது. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை NH85 ன் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு நெடுஞ்சாலை NH85 ன் தெற்கு பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த குழந்தைகள் அசுர வேகத்தில் செல்லும் வாகனங்களுக்கு இடையே எவ்வித பாதுகாப்பும் இன்றி சாலையை தனியாக தினசரி கடந்து சென்று வருகின்றனர். மேலும் உசிலம்பட்டி மற்றும் ஆண்டிபட்டி ஆகிய நகரங்களுக்கு செல்லும் மக்கள் பேருந்தில் ஏறவும் பேருந்தில் இருந்து இறங்கியும் சாலையை பாதுகாப்பின்றி கடக்க வேண்டியுள்ளது. ஆண்டிபட்டி கணவாயில் உள்ள ரயில்வே கேட் காலை 08 மணி & 09 மணி மற்றும் இரவு 07 மணி & 9 மணி என தினசரி 4 முறை ரயில்கள் செல்வதற்காக அடைத்து ஒவ்வொரு முறை திறக்கப்படும் பொழுதும் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒரே நேரத்தில் மடைதிறந்த வெள்ளம் போல கணவாய் மலை பகுதியில் இருந்து சரிவிலிருக்கும் உசிலம்பட்டியை நோக்கி சீறி பாய்கின்றன இதனால் ரயில்வே கேட்டிற்கு மிக அருகில் உள்ள எங்கள் கிராமத்தில் அடிக்கடி சாலை விபத்துக்கள் நடந்து வருகிறது இதேபோல் ரயில் கிராசிங்கிற்காக தடுத்து நிறுத்தப்பட்டு ஆண்டிபட்டியை நோக்கி செல்லும் வாகனங்களின் வேகத்தை குறைக்க ஆண்டிபட்டி கணவாய் to ஆண்டிபட்டி பேருந்து நிலையத்திற்கு இடைப்பட்ட பகுதியில் 5 இடங்களில் பெரிய அளவு Big size பேரிகாடுகள் அமைக்கப்பட்டுள்ளது.. ஆனால் ஆண்டிபட்டி கனவாய் to உசிலம்பட்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் வாகனங்களின் வேகத்தை குறைப்பதற்கான வழிமுறை மற்றும் நடவடிக்கைகள் எதுவும் இல்லை (குறிப்பு :மதுரை - தேனி மார்க்கத்தில் NH85 ல் செல்லும் தனியார் பேருந்துகள் தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லாத வகையில் அசுர வேகத்தில் சென்று வருகின்றனர் என்பது உலகறிந்த செய்தி) எங்கள் கிராமத்தில் 26.09.24 அன்று காலை 08.30 மணிக்கு ஏற்பட்ட மிக கோரமான வாகன விபத்தால் NH85 தேசிய நெடுஞ்சாலையின் போக்குவரத்து ஸ்தம்பித்ததுடன் இந்த விபத்தில் எங்கள் கிராமத்தை சேர்ந்த இருவர் உயிரிழப்பு 5 பேர் படுகாயம் 2 ஷேர் ஆட்டோ முற்றிலும் நசுங்கியதுடன் 2 வீடுகளின் சுவர் இடிந்து விழுந்தது. இது எங்கள் கிராம பொதுமக்கள், இளைஞர் மற்றும் பள்ளி குழந்தைகள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் கிராமம் ஆண்டிபட்டி கணவாய் சரிவின் 1km தொலைவிற்குள் அமைந்துள்ளது என்பதால் தினசரி வாகன விபத்துகளால் பாதிக்கப்பட்டு வருகின்றோம்.. குறிப்பாக 2023 & 2024 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டும் எங்கள் கிராமத்தில் காவல்துறை பதிவு செய்த 21 பெரிய அளவிலான சாலை விபத்துகளில் மட்டும் 25 உயிரிழப்புகள் மற்றும் 30 நபர்களுக்கு படுகாயங்கள் ஏற்பட்டுள்ளது. மற்றும் மேற்குறிப்பிட்ட 2 ஆண்டுகளில் காவல்துறையில் பதிவு செய்யப்படாத சிறிய சாலை விபத்துக்கள் 20க்கும் மேற்பட்டவை. உயிரிழந்தவரின் குடும்பம் நடுத்தெருவில் நிற்கின்றனர் படுகாயம் அடைந்தவர்கள் வாழ வழி தெரியாமல் திகைக்கின்றனர் சாலை விபத்துக்கள் மனித வாழ்க்கையை தலைகீழாக மாற்றி விட்டது. NH85 தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் எங்கள் கிராமம் அமைந்ததால் தினசரி சாலை விபத்துக்கள் ஏற்படுகிறது. இச்சம்பவங்கள் இப்பகுதியில் வாழும் பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகளிடம் நமது கிராமம் மனிதர்கள் வாழ தகுதியற்ற பகுதியாக மாறிவிட்டதா என்ற எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது.. மேலும் NH85 தேசிய நெடுஞ்சாலை தொண்டி முதல் கொச்சி வரை செல்கிறது இதில் தேனி மாவட்டத்திற்குட்பட்ட உப்பார்பட்டி, கோட்டூர், சீலையம்பட்டி, சின்னமனூர், அனுமந்தன்பட்டி மற்றும் K.புதுப்பட்டி ஆகிய கிராமங்களில் சாலை விபத்துக்கள் ஏற்படாத வகையில் NH85 தேசிய நெடுஞ்சாலையில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டு வாகனங்களின் வேகம் கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் ஆண்டிபட்டி கணவாய் முதல் ஆண்டிபட்டி பேருந்து நிலையம் வரையிலான மலை சரிவான பகுதியில் 5 இடங்களில் பேரிக்காடுகள் அமைக்கப்பட்டு அதில் 2 இடங்களில் போலீஸ் செக்போஸ்ட்களும் அமைக்கப்பட்டுள்ளது. எனவே எங்கள் கிராமம் செட்டியப்பட்டியில் குழந்தைகள் பாதுகாப்பாக சாலையை கடந்து பள்ளிக்கு செல்லவும், அடிக்கடி ஏற்படும் சாலை விபத்துக்களை தடுத்திடவும், இனிவரும் காலங்களில் சாலை விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்படாமல் நிறுத்திடவும், T. செட்டியபட்டியில் "வேகத்தடை" அமைத்து "உயிர் பாதுகாப்பு" வழங்குமாறும் மேலும் ஆண்டிபட்டி கணவாய் முதல் உசிலம்பட்டி வரையில் குறைந்தபட்சம் மூன்று இடங்களில் பேரிக்காடுகள் அமைத்து வாகனங்களின் வேகத்தினை குறைத்திடுமாறு சாலை விபத்துகள் ஏற்படும் போது அதனை சுட்டிக்காட்டி சாலையில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தி சாலை மறியல் போன்ற செயல்களில் ஈடுபடாமல் அரசு நிர்வாகத்தின் மீது நம்பிக்கை வைத்து சட்ட விதிமுறைகளை மட்டுமே கடைபிடிக்கும் எட்டு ஊர் இளைஞர் குழு, கிராம பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் சார்பாக கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம். இடம் : T.செட்டியபட்டி தேதி : 09/12/24
நமது ஊரில் அடிக்கடி ஏற்படும் வாகன விபத்துகள் மற்றும் உயிர்சேதங்களை தடுக்கவும் வாகனங்களின் வேகத்தை குறைக்கவும் தேனி மெயின் சாலையில் ஊரின் ஆரம்பம் மற்றும் முடிவு எல்லை என இரண்டு பக்கமும் பேரிகார்ட் அமைத்து பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகளின் நலன் காத்திட்ட நம்ம 8 ஊர் இளைஞர் குழுவினர் எடுத்த முயற்சியால் 4 பேரிகார்ட் அன்பளிப்பாக கிருஷ்ணா வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி தாளாளர் மதிப்பிற்குரிய திரு சந்திரசேகர் அவர்களால் வழங்கப்பட்டு உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் மதிப்பிற்குரிய திரு ஆனந்த், ஹைவே பெட்ரோல் சார்பு ஆய்வாளர் மதிப்பிற்குரிய திரு கருப்பையா மற்றும் மதிப்பிற்குரிய CID திரு லிங்கம், ஆகியோரின் ஆதரவோடு விநாயகர் கோவில் முன்பாக பூஜை செய்து நமது கிராமத்தின் எல்லையில் காவல்துறை அதிகாரிகள், கிராம பொதுமக்கள் மற்றும் நம்ம 8 ஊர் இளைஞர் குழுவினர் இணைந்து சாலையில் பேரிகார்ட் வைக்கப்பட்ட பிறகு நமது ஊரில் வாகன விபத்து நடைபெற்றதால் வாகனங்களின் வேகத்தினை மேலும் குறைக்க பேரிக்கார்டுகளின் எண்ணிக்கையை மூன்றாக அதிகரித்து வாகன விபத்தை முற்றிலும் தவிர்க்குமாறு காவல்துறை CID மதிப்பிற்குரிய திரு லிங்கம் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் இது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று பேரிக்கார்ட்டை மூன்றாக அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் நம்ம 8 ஊர் இளைஞர் குழுவை சேர்ந்த குன்னூத்துப்பட்டி MRK பாரதி அவர்கள் குருதி கொடை வழங்கியதை பாராட்டி உசிலம்பட்டி காவல் ஆய்வாளர் மதிப்பிற்குரிய திரு ஆனந்த் அவர்கள் சால்வை அணிவித்து இதுபோன்று தொடர்ந்து செயல்படுமாறு ஊக்குவித்தார்.
பங்களிப்பு: 1.பூஜை பொருள் திருச்செல்வம் TNSTC Assistant accounts 2.சால்வை (3) சக்கரை குருதாஸ் மோட்டார்ஸ் 3.டிராக்டர் வாகன உதவி M ஆனந்த் வைக்க வியாபாரி 4.குளிர்பானம் S மூர்த்தி விவசாயி.
எட்டு நாட்களுக்கு முன்பாக சமூக விரோதிகளால் தேசிய நெடுஞ்சாலை இருந்த பேரிக்காடு சேதப்படுத்தப்பட்டதை நேற்று எட்டு ஊர் இளைஞர் குழு சரி செய்யப்பட்டு நேற்று மீண்டும் நமது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது ...
உதவிய உள்ளங்கள்: வெல்டிங் மிஷின் M ஆனந்த் வைக்கோல் வியாபாரி வெல்டர் : வெற்றிவேல் இளவரசன் பொது சொத்தை பாதுகாப்பதே நமது கிராமத்தின் வளர்ச்சி
T செட்டியபட்டி TO வாசிநகர் ரோட்டின் மேல் இரு புறங்களிலும் மரக்கொப்புகள் இருப்பதால் அரசு பேருந்து சென்றுவர மிகவும் இடைஞ்சலாகவும் ஜன்னல் ஓரங்களில் அமர்ந்திருப்பவர்களின் பாதுகாப்புக்கு கேள்விக்குறியாக இருப்பதாக ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் கோரிக்கையை ஏற்று உடனடியாக இன்று செட்டியபட்டி TO வாசிநகர் வரை ரோட்டில் இடையூறாக இருந்த மரக்கிளைகளை அகற்றி தர நமது ஊராட்சி மன்ற தலைவரிடம் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று அண்ணன் திரு பாலமுருகமகராஜா எட்டாவது வார்டு உறுப்பினர் களப்போராளி திரு ரங்கநாதன் அவர்களுக்கும் நன்றி நன்றி பொதுநலனில் தொடர்ந்து கவனம் செலுத்தும் எட்டு ஊர் இளைஞர் குழு நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி நன்றி 🙏
நமது பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக அதிகப்படியான விபத்துக்கள் நடக்கிறது இதில் பெரும்பாலான உயிரிழப்பு 108 ஆம்புலன்ஸ் உசிலம்பட்டி அல்லது கா விளக்கு இருந்து வருவதில் ஏற்படும் காலதாமதத்தினால் நிறைய உயிர்களை பறிகொடுத்து இருக்கிறோம் இனிவரும் காலங்களில் இது போன்று உயிரிழப்புகளை தடுப்பதற்கு எட்டு ஊர் இளைஞர் குழுவினர்கள் 108 ஆம்புலன்ஸ் சேவை விரைவாக கிடைத்திட T செட்டியபட்டி அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் முன்பாக ஒரு 108 ஆம்புலன்ஸ் வாகனம் நிரந்தரமாக நிறுத்தி வைப்பதற்கு மதுரை மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் உயர்திரு செல்வராஜ் ஐயா அவர்களே சந்தித்து 05/04 /10/ அன்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பதை உறுதி செய்ய ஐயா அவர்கள் 10/04/24 உடனடியாக நடவடிக்கை எடுத்து T செட்டியபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்பாக108 ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டது உடனடியாக மக்கள் பணி செய்த மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் உயர்திரு திரு செல்வராஜ் ஐயா அவர்களுக்கு கிராம பொதுமக்கள் மற்றும் எட்டு ஊர் இளைஞர் குழு சார்பாக நன்றி நன்றி ஐயா 🙏🙏
10/04/24 அன்று நமது T செட்டியபட்டி விநாயகர் கோவிலில் கிராம பொதுமக்கள் வருவாய்த்துறை அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் ஊராட்சி மன்ற நிர்வாகம் & எட்டு ஊர் இளைஞர் குழு நண்பர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உயிர்காக்கும் இறைவன் 108 ஆம்புலன்ஸ் வருகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு செய்து வரவேற்பு அளித்தனர் 🙏🙏
எட்டு ஊர் இளைஞர் குழு மற்றும் கிராம பொதுமக்களின் ஆதரவோடு T. செட்டியபட்டி மதுரை to தேனி மெயின் ரோட்டில் கிராம பாதுகாப்பு மற்றும் நலன் கருதி CCTV கேமரா பொருத்தப்பட்டு 15/12/24 ஞாயிறு இன்று காலை 12 மணிக்கு உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்தின் சார்பு ஆய்வாளர்கள் மதிப்பிற்குரிய திரு சேகர் திரு பால்ராஜ் மற்றும் எட்டு ஊர் இளைஞர் குழுவின் நற்செயல்பாடுகளை காவல்துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று தொடர்ச்சியாக நமது செயல்பாடுகளை ஊக்கப்படுத்தி வரும் மரியாதைக்குரிய CID திரு.லிங்கம் அவர்களும் கலந்து கொண்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர் இதில் எட்டு ஊர் இளைஞர் குழு மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர் 🙏