நேற்று மாலை நமது வாசிநகர் பொது மந்தையில் எட்டு ஊர் இளைஞர் குழு சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் இளைஞர்களின் நேர்மை சுய ஒழுக்கம் ஒற்றுமை பொது நலன் சாதி மதம் அரசியலுக்கு அப்பாற்பட்டு இளைஞர்கள் ஒற்றுமையாக பயணிப்பதும் தொடர்ச்சியாக பயணிக்கவும் பொது பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு எப்படி கொண்டு செல்வது அதற்கு எவ்வாறு தீர்வு காண்பது என்று தொட்டப்பநாயக்கனூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மதிப்பிற்குரிய
திரு பாலமுருகமகாராஜா, ஊர் பெரியவர்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து ஆலோசிக்கப்பட்டது
கோரிக்கைகள் :
T குன்னுத்துப்பட்டியில் இருந்து கோம்பைக்கு சொல்லும் சாலையில் உள்ள முட்புதர்களை அகற்றி சாலையை சீரமைத்து கொடுக்கமாறு குன்னுத்துப்பட்டி கிராம பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்
வாசி நகர் மயானத்திற்கு செல்லும் பாதையினை (ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது ) மீட்டுக் கொடுக்க வாசி நகர் பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நமது
T குன்னூத்துப்பட்டி பகுதி நேர நியாய விலை கடையை திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்
P அய்யப்பன் B.Com
அவர்களுக்கு
நன்றி
பங்களிப்பு:
1. பொங்கல் சாமான்,
பேனர், மாலை, சால்வை,
T குன்னூத்துப்பட்டி கிராம பொதுமக்கள்
2. பச்சரிசி,
திரு தனபாண்டியன் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக்
முரசு பத்திரிக்கை நிறுவனர்
3. வால் போஸ்ட் 100
திரு விமல்ஈஸ்வர பாண்டியன் RJ பிரிக்ஸ்
RS 1800
குன்னூத்துப்பட்டி வாசிநகர் குறிஞ்சிநகர் மையப் பகுதியில் தோட்டங்களுக்கு ஒரு டிரான்ஸ்பார்மர் மட்டுமே இருந்ததால் ஏற்படும் மின் பற்றாக்குறையால் கிராமங்களின் குடிநீர் மோட்டார் முறையாக இயக்க முடியவில்லை அதனால் இந்த மூன்று கிராம குடிநீர் மோட்டார் இயக்குவதற்கு மட்டும் தனியாக ஒரு டிரான்ஸ்பார்மர் அமைத்து கொடுக்க வேண்டும் என எட்டு ஊர் இளைஞர் குழுவினர் கோரிக்கையை முன்னெடுத்து அதை அனைத்து விவசாய சங்கங்களின் மாநில ஒருங்கிணைப்பு கௌரவத் தலைவர் *மதிப்பிற்குரிய திரு MP ராமன் அவர்களின் உதவியுடன் மதுரை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர் அதன் பலனாக இன்று நமக்கு குடிநீர் மோட்டார் இயக்குவதற்கு என 9 போஸ்ட் மரம் ஊண்டி தனியாக ஒரு சிறிய டிரான்ஸ்பார்மர் அமைத்துக் கொடுத்துள்ளனர் இதற்கு உதவியாக இருந்த மதிப்பிற்குரிய திரு ராமன் ஐயா அவர்களுக்கும் உசிலம்பட்டி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் திரு ரஞ்சித் குமார் போர் மேன், திரு லிங்கம் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் இதற்கு உறுதுணையாக இருந்து JCP உதவி வழங்கிய குன்னூத்துப்பட்டி வாசிநகர் குறிஞ்சிநகர் கிராம பொதுமக்களுக்கும் மற்றும் அரசு அதிகாரிகள் எட்டு ஊர் இளைஞர் குழு கிராம பொதுமக்கள் என அனைவரையும் திட்டம் நிறைவேறும் வரை தொடர்ந்து ஒருங்கிணைத்த குன்னூத்துப்பட்டி* மதிப்பிற்குரிய* திரு அம்மாசி அப்பா அவர்களுக்கும் நன்றி
நமது தொட்டப்பாநாயக்கனூர்
கிராம நிர்வாக அலுவலராக கடந்த மூன்று ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றி இளைஞர்கள் முன்னெடுக்கும் பொது பிரச்சனைகளுக்கு துணை நின்று இளைஞர்கள் பொது மக்களின் அன்பைப் பெற்று எளியவர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எப்போதும் எளிமையாக அணுகக் கூடியவராக மிகவும் சிறப்பாக மக்கள் பணி செய்த தொட்டப்பநாயக்கனூர் கிராம நிர்வாக அலுவலர் மதிப்பிற்குரிய
திரு சசிகுமார் அவர்களின் மக்கள் பணி இன்று போல் என்றும் செம்மையாக சிறப்பாக நடைபெற எங்கள் கிராம பொதுமக்கள் சார்பாகவும் எட்டு ஊர் இளைஞர் குழு சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
தற்போது பணியிடை மாறுதல் காரணமாக செல்லம்பட்டி ஒன்றியம் கோவிலாங்குளம் கிராம மக்களுக்கு உங்களின் சேவை கிடைப்பதில் மகிழ்ச்சி உங்களின் சேவை அங்கும் சிறக்க வாழ்த்துக்கள்
உங்களின் அன்பும் சேவையும் எப்போதும் எங்கள் பகுதி மக்களுக்கும் இளைஞர்களுக்கும் கிடைக்கட்டும் ஐயா
பங்களிப்பு :
சால்வை: 2
திரு ராதாகிருஷ்ணன் சர்வேஷ் பாண்டி பிராய்லர்
தொ,விளக்கு
இந்திய நாடு சுதந்திரமடைந்து 79 ஆண்டுகளுக்கு பிறகு நமது ஊரில் முதல் முறையாக அரசு பள்ளியில் பயின்ற மாணவி அன்பு தங்கை நம்புச்செல்வி மருத்துவராகியுள்ளார். தங்கை நம்புச்செல்வி யின் சாதனையை பாராட்டவும் மேலும் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் திருமதி பத்மா அவர்களுக்கும் பல மாணவர்களை அரசு அதிகாரிகளாக உருவாக்கிய T செட்டியபட்டி பள்ளியின் ஆசிரியர்களுக்கும் எட்டு ஊர் இளைஞர் குழு சார்பாக பாராட்டு விழா நடைபெறுகிறது. இளம் மருத்துவர் மற்றும் ஆசிரியரை கெளரவிப்பவர் சிறப்பு விருந்தினர் உயர்திரு ஆனந்த் ,காவல் ஆய்வாளர் ,உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையம். அரசு பள்ளியில் தமிழ் வழிக் கல்வி பயின்றால் கிடைக்கும் நன்மைகள் குறித்த சிறப்புரை உயர்திரு அன்பழகன் தணிக்கை துறை ஆய்வாளர். இடம் :T செட்டியபட்டி பள்ளி வளாகம்.
இன்று நமது ஊரில் முதல் முறையாக அரசு பள்ளியில் பயின்று அன்பு தங்கை நம்புச்செல்வி மருத்துவராகியுள்ளார் தங்கை நம்புச்செல்வி யின் சாதனையை பாராட்டியும் மேலும் பல மாணவர்களை அரசு அதிகாரிகளாக உருவாக்கியதுடன் நல்லாசிரியர் விருதும் பெற்ற ஆசிரியர்
திருமதி பத்மா அவர்களுக்கும் எட்டு ஊர் இளைஞர் குழுவினர் நடத்திய பாராட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் பெரியோர்களுக்கும் இந்த விழா சிறப்பாக நடைபெற வெளியிலிருந்து ஆதரவளித்த நல்லுள்ளங்களுக்கும் நன்றி
1. திரு காசிராஜ பாண்டியன்
RJ பிரிக்ஸ் 1000
2. திரு பிரேம் குமார்
Yuvethika traders 1000
3. திரு சக்கரை ஞானவேல் மோட்டார்ஸ் 1000
4. திரு அஜித் குமார் ஜமுனா கன்ஸ்ட்ரக்ஷன் 1000
5. திரு குபேந்திரன்
Tகுன்னத்துப்பட்டி
இட்லி கடை மும்பை.1000
6. திருமதி வெண்ணிலா பத்திர எழுத்தாளர் 1000
7. திரு முத்துக்குமார் காவல்துறை 1000
8. திரு ராம்குமார் இராணுவம் 1000
9. திரு சதீஷ் இராணுவம் 1000
10. திரு சக்தி முருகன் ரேடியோஸ் & சேர்
11. திரு ரெங்கநாதன்
EX எட்டாவது வார்டு உறுப்பினர் சால்வை 08
12. திரு ராதாகிருஷ்ணன் சர்வின் பிராய்லர்ஸ் சால்வை 07
தொட்டப்பநாயக்கனூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட இடையபட்டி கிராமத்தை ஒட்டி அமைந்துள்ள ஒட்டான்கரடு மலையினை ஒட்டி அமைந்துள்ள 500 ஆண்டு பாரம்பரிய வண்டிப்பாதைதான் ஒட்டாங்கரட்டிற்கு பின்புறம் விவசாய தோட்டம் வைத்துள்ள விவசாயிகள் சென்று வருவதற்கான ஒரே வழி. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக வனத்துறை அதிகாரிகள் ஒட்டாங்கரட்டில் செல்லும் வண்டிப் பாதையை மூடப் போவதாகவும் அதனால் இப்பகுதி மக்கள் இப்பாதையை பயன்படுத்தக் கூடாது எனவும் தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றனர். இப்பாதை அடைக்கப்பட்டால் இப்பாதையின் வழியாக தங்களது விவசாய நிலங்களுக்குச் சென்று வரும் 150 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே எட்டு ஊர் இளைஞர் குழு ஒட்டாங்கரட்டில் உள்ள வண்டி பாதையை வனத்துறையினர் அடைக்க விடாமல் விவசாயிகள் தொடர்ந்து பயன்படுத்திடவும், வனத்துறையினரின் அச்சுறுத்துதல்களிலிருந்து விவசாயிகளை பாதுகாத்து இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என இடையபட்டி பொதுமக்கள் சார்பாக பதிவு செய்கிறேன்.
எட்டு ஊர் இளைஞர் குழுவினரால் இன்று உடனடியாக நேரடி கள ஆய்வு செய்யப்பட்டது. அடுத்த கட்டமாக வருவாய் துறை , வனத்துறை , காவல்துறை அரசு அதிகாரிகளை சந்தித்து இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண முடிவு எடுக்கப்பட்டுள்ளது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா தொட்டப்பநாயக்கனூர் பஞ்சாயத்து இ.புதுப்பட்டி கிராம விவசாயிகள் பயன்படுத்தி வந்த ஒட்டான்கரடு வண்டிபாதையை இனிவரும் காலங்களில் விவசாயிகள் பயன்படுத்த முடியாதவாறு வேலி அமைத்து தடுக்க வனத்துறையினர் முயற்சி செய்தனர். வனத்துறையின் இச்செயலை தடுத்து விவசாயிகளை பாதுகாக்க எட்டு ஊர் இளைஞர் குழு 18/08/21 அன்று முதல் கட்டமாக உசிலம்பட்டி வனச்சரகர் (ரேஞ்சர்) மதிப்பிற்குரிய திரு. அன்னக்கொடி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போதும் 15 நாட்களில் வண்டி பாதையை வேலி அமைத்து தடுத்து விடுவோம் எனக் கூறியதால் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இது விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது எனவே 18/08/25 அன்று மாலை உசிலம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் உயர்திரு சந்திரசேகர் ஐயா அவர்களின் கவனத்திற்கு இப்பிரச்சனை கொண்டு செல்லப்பட்டது. இப்பிரச்சனை குறித்து மாவட்ட சட்ட ஒழுங்கு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறியதுடன் பொது பிரச்சினைகள் குறித்த நமது இளைஞர்களின் செயல்பாடுகளுக்கு ஊக்கமளித்தார். இன்று 21/08/25 உசிலம்பட்டி சார் ஆட்சியர் உயர்திரு உட்கர்ஸ் குமார் இ ஆ ப ஐயா அவர்களை சந்தித்து ஒட்டான் கரடு வண்டி பாதை தொடர்பான ஆவணங்களோடு ஐயா அவர்களை சந்தித்து இப்பிரச்சனை குறித்து முழுமையாக விளக்கம் அளித்து சார் ஆட்சியர் அவர்கள் ஒட்டாங்கரடு வண்டி பாதையை நேரடி கள ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கையினை முன் வைத்துள்ளோம். உசிலம்பட்டி சார் ஆட்சியர் அவர்கள் நேரடியாக கள ஆய்விற்கு வருவதாக தெரிவித்துள்ளார். மிகவும் கனிவுடன் கோரிக்கைகளை கேட்டறிந்து விவசாயிகளின் பிரச்சனைக்கு தீர்வு காண வழிவகை செய்யும் சார் ஆட்சியர் அவர்களுக்கு நன்றி. மேலும் அனைத்து விவசாய சங்கங்களின் மாநில ஒருங்கிணைப்பு கௌரவத் தலைவர் மதிப்பிற்குரிய திரு MP ராமன் ஐயா அவர்களின் துணையுடன் இன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையிலான விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவரின் கவனத்திற்கு கொண்டு சென்ற ராமன் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி மிக விரைவில் இப்பிரச்சனைக்கு எட்டு ஊர் இளைஞர் குழுவினரால் நிரந்தர தீர்வு காணப்படும்
செட்டியபட்டி பேருந்தை சரியான நேரத்தில் இயக்கவும் மற்றும் வாசிநகர் குறிஞ்சி நகர் குன்னூத்துப்பட்டி பள்ளி மாணவ மாணவிகள் நலன் கருதி வாசிநகர் மாலை 6 மணி பேருந்தை 7 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டது... அதை ஏற்று உடனடியாக இன்று மாலை நேர பேருந்து இயக்கப்பட்டது... உசிலம்பட்டி TNSTC கிளை மேலாளர் அவர்களுக்கு 8 கிராம பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் எட்டு ஊர் இளைஞர் குழு சார்பாக மனமார்ந்த நன்றி
எட்டு ஊர் இளைஞர் குழு தீர்மானத்தின் படி குன்னூத்துப்பட்டி முதல் கோம்பை வரை 2.5 km செல்லும் சாலையின் இருபுறங்களில் இருக்கும் முட்புதர்களை அகற்றி சாலையை சுத்தம் செய்து தருமாறு கோரிக்கை வைக்கப்பட்டது அதன் அடிப்படையில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய
திரு இளமகிழன் அவர்களால் 20/05/25 அன்று சுத்தம் செய்யும் பணி துவங்கப்பட்டு நான்கு நாட்களில் JCB யால் சுத்தம் செய்யும் பணி முடிக்கப்பட்டது.
1.சுத்தம் செய்யும் பணிக்கான மூன்று நாட்கள் JCB உதவி அண்ணன் மதிப்பிற்குரிய திரு இளமகிழன், தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர், அவர்கள்
2 சுத்தம் செய்யும் பணிக்கான ஒரு நாட்கள் JCB உதவி மதிப்பிற்குரிய திரு.அல்மா வேலாயுதம் அவர்கள்
சாப்பாடு செலவுக்காக RS 5000 வழங்கினார். அதில் RS 1600செலவு போக மீதி RS 3400 திருப்பி ஒப்படைக்கப்பட்டது.
3 மதிப்பிற்குரிய திரு.ம.ஆனந்த் (வைக்கோல் வியாபாரி) டிராக்டர் உதவி 14 லோடு குப்பை அகற்றம் செய்யும் பணிக்காக
4 குடிநீர் பைப் லைன் உடைந்து சேதம் ஏற்பட்டதை உடனடியாக சரி செய்து கொடுத்து ஊராட்சி செயலாளர் மதிப்பிற்குரிய
திரு மகேஸ்வரன்
6 திரு K பிரேம்குமார் புகழினி மொபைல்ஸ் 2 சால்வை உதவி
எட்டு ஊர் இளைஞர் குழு,
இன்று எட்டு ஊர் இளைஞர் குழு &தேனி மாவட்ட நல்லோர் வட்டம் சார்பாகவும் மலைவாழ் மக்கள் மற்றும் நம் பகுதி பொதுமக்கள் பயன்படும் வகையிலான மருத்துவ முகாம் குறிஞ்சி நகர் கிராமத்தில் பயனுள்ள வகையில் நடைபெற்றது முகாமில் சர்க்கரை நோய்,இரத்தசோகை, இரத்த அழுத்தம்,தோல் சம்பந்தப்பட்ட நோய்கள்,சளி, இருமல், காய்ச்சல் போன்ற நோய்கள் கண்டறியப்பட்டு, அதற்கான மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது 62 மலைவாழ் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர் முகாமிற்கு தேவையான மருத்துவ உதவிகளை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மயக்கவியல் துறை உதவி பேராசிரியர் மருத்துவர் மதிப்பிற்குரிய 1.திரு பெரியசாமி வழங்கினார். மருத்துவ சிகிச்சை மதிப்பிற்குரிய அரசு மருத்துவர் திருமதி 2.ப்ரியா MBBS அவர்கள் மருந்தாளுநர்கள் மனித நேயர் 3.திரு.ரஞ்சித் அவர்கள் 4.திரு.ரமேஷ் அவர்கள் 5.திரு குறிஞ்சிமணி பிஸ்கட் உடைகள் 6.திரு கருப்பு தீயணைப்பு துறை சால்வை 5 7.திரு மலைராமன் அபிராமி டிராவல்ஸ் சால்வை 3 8.திரு சதீஷ் ராணுவ வீரர் பேனர் 1 9.திரு ரஞ்சித் லீனா ஆட்டோ மரக்கன்று 1 10.திரு சரவணன் குமரன் ரேடியோஸ் டேபிள் (2 ) சேர் (10) 11.திரு ரெங்கநாதன் EX எட்டாவது வார்டு உறுப்பினர் ஆட்டோ உதவி திரு சந்தோஷ் அவர்களின் இனிய அகவை நாளை முன்னிட்டு தான் பிறந்த மண் என்னாலும் பயனுற மரக்கன்று நடவு செய்யப்பட்டது இந்த ஆகச் சிறந்த செயலுக்கு நட்புடன் உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையம் எட்டு ஊர் இளைஞர் குழு
நமது அண்ணா நகரில் சிமெண்ட் சாலை அமைத்து தர வேண்டி எட்டு ஊர் இளைஞர் குழு முயற்சியால் அண்ணாநகர் பகுதியில் சிமெண்ட் சாலை பணி தற்போது நடைபெறுகிறது இதற்கு உறுதுணையாக இருந்த உசிலம்பட்டி கிராம ஊரக வளர்ச்சி அலுவலர் அவர்களுக்கும் , தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் அவர்களுக்கும், ஊராட்சி செயலாளர் அவர்களுக்கு நன்றி
T குன்னூத்துப்பட்டி அழகுமலை அவர்களின் மகளுக்கு உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அளிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதை மதுரை மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் உயர்திரு திரு Dr.செல்வராஜ் ஐயா அவர்களின் கவனத்திற்கு எட்டு ஊர் இளைஞர் குழு சார்பாக கொண்டு செல்லப்பட்டது பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சேவை கிடைப்பதை உறுதி செய்ய ஐயா அவர்கள் கூடுதல் கவனம் செலுத்தி உடனடியாக இன்று 19/6/24 நல்ல முறையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது என்ற மகிழ்ச்சியான செய்தி சரியான நேரத்தில் சரியாக மக்கள் பணி செய்த மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் உயர்திரு திரு Dr.செல்வராஜ் ஐயா அவர்களுக்கு எட்டுஊர் இளைஞர் குழு சார்பாக நன்றி
இன்று 19/06/24 நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் அசுவமனா நதி அணையை தூர்வாரி கிளைக் கால்வாய் மற்றும் வரத்து கால்வாய் பராமத்து பணி செய்து சீமை கருவேலை மரங்களை அகற்றி அணையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர இன்று எட்டு ஊர் இளைஞர் குழு சார்பாக கோரிக்கை முன்வைக்கப்பட்டது
செட்டியபட்டி பேருந்தை சரியான நேரத்தில் இயக்கவும் மற்றும் வாசிநகர் குறிஞ்சி நகர் குன்னூத்துப்பட்டி பள்ளி மாணவ மாணவிகள் நலன் கருதி வாசிநகர் மாலை 6 மணி பேருந்தை 7 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டது... அதை ஏற்று உடனடியாக இன்று மாலை நேர பேருந்து இயக்கப்பட்டது... உசிலம்பட்டி TNSTC கிளை மேலாளர் அவர்களுக்கு 8 கிராம பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் எட்டு ஊர் இளைஞர் குழு சார்பாக மனமார்ந்த நன்றி
நமது குறிஞ்சிநகரில் கடந்த 40 நாட்களுக்கு மேலாக 12க்கும் மேற்பட்ட தெரு விளக்குகள் மொத்தமாக தெரியாமல் இருந்ததை இன்று போர் மேன் திரு பொன்னழகர் திரு ரஞ்சித் அவர்களின் உதவியுடன் இன்று மின்விளக்கு எரிந்தது குறிஞ்சிநகர் கிராம பொதுமக்கள் சார்பாகவும் எட்டு ஊர் இளைஞர் குழு நண்பர்கள் சார்பாகவும் நன்றி
நம்ம 8 ஊர் இளைஞர் குழு தளத்தில் பயணிக்கும் மனிதநேயர் டாக்டர் N ரஞ்சித் குமார் அவர்களின் ஆகச் சிறந்த மனிதநேய செயல்பாடுகளை கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவில் தமிழக ஆளுநர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் அங்கீகரித்து கௌரவித்துள்ளார்கள். இந்த மாமனிதரை நம்ம 8 ஊர் இளைஞர் குழு மற்றும் கிராம பொதுமக்கள் சார்பாக நாளை 01/09/24 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 30 PM மணி அளவில் T குன்னூத்துப்பட்டி கிராம பொது மந்தையில் அனைத்து விவசாய சங்க மாநில ஒருங்கிணைப்பு கௌரவ தலைவர் விவசாயிகளின் தோழன் திருMP ராமன் அவர்கள் கலந்து கொண்டு நமது சார்பாக கௌரவிக்க உள்ளார்.. .. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளரான நம் பகுதியின் இயற்கைக்கும் நீர் நிலைகளுக்கும் பெரும் அரணாக இருக்கும் அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு மாநில கௌரவத் தலைவர் விவசாயிகளின் தோழன் திரு MP ராமன் அவர்களிடம் நம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அசுவமாநதி அணையில் சீமை கருவேலை மரங்களை அகற்றி தூர்வாரி வரத்து கால்வாய் சீரமைக்கவும். நம் பகுதியில் விவசாயிகளுக்கு அடிக்கடி ஏற்படும் மின்சார பிரச்சனைக்கு ( டிரான்ஸ்பார்மர்) நிரந்தர தீர்வு காண அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு நம்ம 8 ஊர் இளைஞர் குழுவினர் குரலற்றவர்களின் குரலாய் ஒலிக்கும் திரு MP ராமன் அவர்களிடம் கோரிக்கையை முன்வைக்க உள்ளனர். நம்ம 8 ஊர் இளைஞர் குழுவின் குருதிக்கொடையாளர்கள் 1 திரு K சிவா 2 திரு A மணி குமரேசன் 3 திரு S மலை ராஜா 4 திரு C சிவசாமி (மற்றும்) நமது அண்ணா நகர் பகுதி இளம் சமூக சிந்தனையாளர்களின் செயல்பாடுகளை கிராம பொதுமக்கள் சார்பாகவும் நம்ம 8 ஊர் இளைஞர் குழுவின் சார்பாகவும் வாழ்த்தி பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர்.
குன்னுத்துப்பட்டி கிராமத்தில் நம்ம 8ஊர் இளைஞர்கள் குழு மற்றும் கிராம பொதுமக்கள் சார்பில் நடைபெற்ற தன்னார்வலர் Dr.ரஞ்சித்குமார் அவர்களை கௌரவிக்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பின் மாநில கௌரவ தலைவர் விவசாயிகளின் பாதுகாவலர் மதிப்பிற்குரிய M.P.ராமன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார் இந்த நிகழ்வில் நமது கிராம வளர்ச்சிக்கு பல்வேறு கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது நல்ல செயலை ஊக்கப்படுத்தவும் நமது கிராம வளர்ச்சிக்கும் முயற்சிக்கும் நம்ம 8 ஊர் இளைஞர் குழுவினர்களுக்கு கிராம பெரியவர்கள் பொதுமக்கள் ஆதரவளித்தது மகிழ்ச்சியும் ஊக்கத்தையும் அளித்தது
தொட்டப்ப நாயக்கனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிப் பெண்களையும் முதியவர்களையும் அவமரியாதையாக மருத்துவர் மற்றும் செவிலியர்கள் நடந்து கொள்வதால் இன்று எட்டு ஊர் இளைஞர் குழு சார்பாக சென்று விளக்கம் கேட்கப்பட்ட போது நிர்வாகம் முறையான தகவல் அளிக்காமல் முன்னுக்கு பின்னாக தகவல் அளித்ததால் விளக்கம் போதிய திருப்தி அளிக்காததால் நாளை காலை மீண்டும் 9:15 மணி அளவில் எட்டு ஊர் இளைஞர் குழு சார்பாக மீண்டும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் முதல் நிலை அதிகாரியோடு சந்தித்து குறைகளை சுட்டிக்காட்ட உள்ளனர் எட்டு ஊர் இளைஞர் குழு நண்பர்கள் மீண்டும் நாளை காலை 9:15 மணி அளவில் தொட்டப்ப நாயக்கனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்பாக வருமாறு கேட்டுக்கொள்கிறோம் முறையற்ற நிர்வாகத்தை சரியான பாதையில் சீர் செய்ய முயற்சிக்கும் இளைஞர்களின் முயற்சிக்கு நிர்வாகம் இனிவரும் காலங்களில் இது போன்ற குறைகள் வராது என்ற உத்தரவாதம் அளித்துள்ளார்கள்
செட்டியபட்டி மயானத்தில் குளியல் தொட்டி மற்றும் போர்வெல் அமைக்கவும் & செட்டியபட்டி தெற்கு பகுதி நீதிபதி தெருவில் பேவர்பிளாக் சாலை அமைத்துக் கொடுக்க எட்டு ஊர் இளைஞர் குழுவினர் வைத்த கோரிக்கையை ஏற்று நம் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதி ஊராட்சி நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டது.
எங்கள் கிராமத்திற்கு நியாய விலை கடை கேட்டு மனு இங்கு 350 குடும்பங்களும் 250 குடும்ப அட்டைதாரர்களும் வாழ்ந்து வருகிறோம் எங்கள் கிராமத்தில் பெரும்பாலான குடும்ப அட்டைதாரர்கள் முதியவர்கள் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் முகவர்களாக இருக்கிறோம் ஐயா எனவே எங்கள் கிராமத்தில் வாழும் பெரியவர்களின் உடல்நிலை மற்றும் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு முதியவர்களின் நலன் காக்க எங்கள் கிராமத்து இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இணைந்து தங்களால் இயன்ற நிதி உதவி அளித்து நியாய விலை கடை செயல்படுவதற்காக கட்டடம் கட்டும் பணி முழுமையாக நிறைவு பெற்று உள்ளது ஐயா பகுதி நேர நியாய விலை கடையைத் திறக்க அனுமதிக்க கிராமத்து இளைஞர்கள் கிராமத்தின் சார்பாக அய்யாவின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம் நியாய விலை கடையை இந்த கட்டிடத்தில் திறந்து வைத்து எங்கள் கிராம இளைஞர்களின் முயற்சிக்கும் எங்கள் கிராம பெரியவர்களுக்கும் உதவிடுமாறு ஐயா அவர்களின் கவனத்திற்கு கடந்த 30 /01/24 கொண்டு வந்தோம் எங்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக ஐயா அவர்கள் நியாயவிலைக் கடை வேண்டி உயர்திரு கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் அவர்களுக்கு நீங்களே பரிந்துரைத்து கடிதம் எழுதிக் கொடுத்தீர்கள் ஐயா அதன் பலனாக கூட்டுறவுத் துறையில் அனுமதி கிடைத்துள்ளதாக தகவல் கிடைக்கப்பட்டுள்ளது மேலும் அய்யாவின் உதவியுடன் கிராம இளைஞர்கள் உயர்திரு உசிலம்பட்டி வட்ட வழங்கல் அலுவலரின் கவனத்திற்கு 06/03/24 கொண்டு செல்லப்பட்டது இதனால் 20/03/24அன்று மதுரை மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் எங்கள் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலை கட்டிடத்தை ஆய்வு செய்தார்கள் ஐயா அதில் தற்போது வரை எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் கிராம இளைஞர்களும் பொதுமக்களும் மீண்டும் அய்யாவின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம் ஐயா அவர்கள் கூடுதல் கவனம் செலுத்தி நியாய விலை கடையை செயல்பாட்டுக்கு கொண்டு வருமாறு உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
மாண்புமிகு மாவட்ட ஆட்சியருக்கு மாநில திட்ட குழு நிதியில் புதிதாக கட்டப்பட்ட Medicine Plant Processing Unit-க்கு சாலை வசதி அமைத்து தர கோரிக்கை புதிதாக கட்டப்பட்டுள்ள Medicine Plant Processing Unit-ஐ சுற்றியுள்ள எட்டு கிராமங்களில் வசித்து வருகின்றோம். எங்கள் பகுதியில், மாநில திட்ட குழு நிதியில் புதிதாக Medicine Plant Processing Unit கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. எனினும், இக்கட்டிடத்திற்கு செல்வதற்கு தேவையான சாலை வசதி இல்லாத காரணத்தால், பொதுமக்கள், பணியாளர்கள் மற்றும் வாகனங்களின் போக்குவரத்துக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. சரியான சாலை வசதியின்மையால் அங்கு நடைபெறும் பொது பயன்பாட்டின் செயல்பாடுகளில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது மேலும், இது பொதுமக்களுக்கு Medicine Plant Processing Unit-ன் சேவைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. எனவே, Medicine Plant Processing Unit-க்கு பொதுமக்கள் வாகனங்களுடன் சென்று வர ஏதுவாக, செட்டியபட்டி to வாசிநகர் சாலையிலிருந்து 100 அடி நீளம் மற்றும் 20 அடி அகலத்தில் சாலை வசதியினை விரைவாக அமைத்து தருவதற்கான நடவடிக்கை எடுத்து, எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்
உசிலம்பட்டி TNSTC கிளை மேலாளரின் உத்தரவை பின்பற்றாமல் அவமரியாதை செய்யும் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி உசிலம்பட்டி To ஆண்டியபட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் குஞ்சாம்பட்டிக்கும் பூச்சியபட்டிக்கும் இடையில் மெயின் ரோட்டிலே எங்கள் கிராமம் குளத்துப்பட்டி அமைந்துள்ளது இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட அருந்ததியர் குடும்பங்கள் மட்டும் வசித்து வருகிறோம் எங்கள் கிராமம் மெயின் ரோட்டில் இருந்தும் இங்குள்ள மக்கள் தான் அன்றாட பணி நிமித்தமாக உசிலம்பட்டி அல்லது ஆண்டியபட்டிக்கு சென்று வர விடுதலை பெற்று 75 ஆண்டுகளாகியும் பள்ளி குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள் முதியவர்கள் என நாங்கள் அனைவரும் பக்கத்து கிராமத்திற்கு நடந்து சென்று பேருந்து ஏரி இறங்க வேண்டிய அவல நிலை இருந்தது இந்த அவல நிலையை கிராம இளைஞர்களும் எங்கள் பகுதி சமூக ஆர்வலர்கள் கடந்த 27/01/24 அன்று உசிலம்பட்டி TNSTC கிளை மேலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம் கிளை மேலாளர் அவர்கள் மிக நேர்மையாக கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக அந்த வழித்தடத்தில் இயங்கும் (சிட்டி பஸ்) தொட்டப்பநாயக்கனூர், T செட்டியபட்டி, ஆண்டியபட்டி, சங்கரமூர்த்திபட்டி ,மறபட்டி, என அனைத்தும் பேருந்துகளும் குளத்துப்பட்டி கிராமத்தில் பேருந்தை நிறுத்தி ஆட்களை ஏற்றவும் இறக்கவும் வாய்மொழி உத்தரவிட்டார் இந்த உத்தரவு ஓட்டுநர் நடத்துனர்கள் ஏற்காததால் மீண்டும் 11/06/24 அன்று கிளை மேலாளரை சந்தித்து எங்கள் பிரச்சினையை எடுத்துக் கூறினோம் உடனடியாக சுற்றறிக்கை பிறப்பித்தும் அதை தகவல் பலகையில் ஒட்டி கிராம மக்களுக்கு ஆதரவளித்தார் மேலாளர் இது கிராம மக்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது கிராம மக்களும் சமூக ஆர்வலர்களும் இணைந்து சரியாக மக்கள் பணி செய்து அரசின் நிர்வாகத்தின் மீது நம்பிக்கை ஏற்படுத்திய கிளை மேலாளர் அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்தும் நன்றியும் தெரிவித்தோம் ஆனால் அன்று முதலே ஒரு சில ஓட்டுநர்கள் குறுகிய மனப்பான்மையில் எங்கள் கிராமம் குளத்துப்பட்டியில் பேருந்து நிறுத்துவதற்கு மறுத்து வருகிறார்கள் (குறிப்பாக) நேற்று 27/12/24 மாலை 7 pm ஆண்டியபட்டி பேருந்து இயக்கிய ஓட்டுனர் இதில் மிகவும் பிரசித்தி பெற்றவர் எங்கள் பகுதியைச் சேர்ந்த கட்டிட வேலைக்கு சென்று வந்த தாய்மார்கள் மாலை 7pm மணிக்கு ஆண்டிபட்டி பேருந்து இருந்தும் ஏறவில்லை நான் பேருந்து தான் இருக்கிறதே வாருங்கள் செல்லலாம் என அழைத்தும் அந்த தாய்மார்கள் இந்த ஓட்டுனர் நமது கிராமத்தில் நிறுத்த மாட்டார் அதனால் நாங்கள் அடுத்த பேருந்தில் வருகிறோம் என தெரிவித்தார்கள் இதனால் நான் மட்டும் பேருந்தில் ஏறி நடத்துனர் மற்றும் பேருந்து ஓட்டுனரிடம் ஐயா எங்கள் கிராமம் குளத்துப்பட்டியில் நிறுத்துவதில் உங்களுக்கு என்ன சிரமம் உள்ளது உங்களின் உயர் அதிகாரியை சந்தித்து முறையாக அனுமதி பெற்றுள்ளோம் கிளை மேலாளர் அவர்கள் குளத்துப்பட்டியில் பேருந்தை நிறுத்த சுற்றறிக்கை கொடுத்துள்ளார் அதை ஏன் நீங்கள் மட்டும் பின்பற்ற மறுக்கிறீர்கள் என நான் கேள்வி எழுப்பும்போது நான் குளத்துப்பட்டியில் நிறுத்த மாட்டேன் எனக்கு சுற்றறிக்கை பற்றி தெரியாது என்றார் நான் அந்த சுற்றறிக்கையை ஓட்டுனர் நடத்துனரிடம் காண்பித்த பின் நடத்துனர் முறையாக இறக்கி விடப்படும் என தெரிவித்தார் ஓட்டுநர் அதை ஏற்க மறுத்தார் குளத்துப்பட்டி வந்தவுடன் நடத்துனர் விசிலும் அடித்தார் அதையும் ஓட்டுநர் பொருட்படுத்தவில்லை சுற்றறிக்கை பற்றி எனக்கு கவலை இல்லை என்கிறார் உயர் அதிகாரியான பொது மேலாளர் மற்றும் கிளை மேலாளரிடம் புகார் செய்வேன் என்றால் புகார் செய்து கொள்ளுங்கள் அதைப் பற்றியும் கவலைப்பட மாட்டேன் நான் குளத்துப்பட்டியில் பேருந்தை நிறுத்த மாட்டேன் குஞ்சாம்பட்டியில் இறங்கிக் கொள்ளுங்கள் அல்லது பூச்சியப்பட்டியில் இறங்கி நடந்து செல்லுங்கள் என என்னை இறுதியாக பூச்சியபட்டியில் தான் இறக்கி விட்டார் ஏன் இந்த தான்தோன்றித்தனம் குறுகிய எண்ணம் தலையில் சுமையுடன் வரும் பெண்கள் முதியவர்களின் நிலைமை என்ன மேல் அதிகாரிகளின் உத்தரவை மதிக்காமல் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்ளும் இந்த ஓட்டுனரின் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுத்தும் குளத்துப்பட்டியில் நிற்க மாட்டேன் என சொல்வதற்கான விளக்கத்தையும் மேல் அதிகாரிகளின் உத்தரவை பின்பற்ற உரிய பயிற்சியும் அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
எங்கள் ஊரை சேர்ந்த அ.மலைராஜா அவர்களை மதுரை இராசாசி மருத்துவமனையில் mesalamine 1.2g மாத்திரைகளை பெற ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து அலைக்கழிப்பது தொடர்பான புகார் ஐயா / அம்மா அ.மலைராஜா T.செட்டியபட்டி, தொட்டப்பநாயக்கனூர் அஞ்சல் உசிலம்பட்டி வட்டம் மதுரை,625532. சிகிச்சை பெற்று மதுரை இராசாசி மருத்துவமனையில் மாத்திரைகளை பெற்று வருகிறார். எனினும், பல மாதங்கள் மருத்துவர்கள் மூலம் பரிந்துரை செய்யப்பட்ட மாத்திரைகள் அவருக்கு உரிய நேரத்தில் வழங்கப்படுவதில்லை. இதனால் அவரது உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுவதுடன் பொருளாதார செலவும் ஏற்படுகிறது. ஒவ்வெரு மாதமும் 2 முறைக்கு மேல் 60km தூரம் அலைந்தால் தான் mesalamine மாத்திரைகளை பெற முடியும் நிலை உள்ளது. மேலும் கடந்த 16.10.2024 அன்று அவர் மாத்திரை வாங்க சென்ற போது உள்ளூர் கொள்முதல் அடிப்படையில் மாத்திரைக் கொள்முதல் செய்யப்பட்டு அவருக்கு வழங்கப்பட்டதாக உண்மைக்குப் புறம்பான தகவல் இராசாசி மருத்துவமனை முதல்வரால் இணைய வழி முதலமைச்சரின் மனுவிற்கு பதிலாக அளிக்கப்பட்டுள்ளது. உண்மையில் அவர் 25.10.2024 அன்று 60km தூரம் மீண்டும் பயணித்து சென்று மாத்திரைகளை பெற்றுள்ளார். மேலும் ஒவ்வொரு மாதமும் இரண்டு அல்லது மூன்று முறை அலைந்த பிறகும் பரிந்துரைக்கப்பட்ட mesalamine 1.2g பதிலாக mesalamine 400Mg மாத்திரைகளை மட்டுமே இருப்பு இல்லை என்ற காரணம் கூறி பல மாதங்கள் வழங்கியுள்ளனர். மருத்துவமனை முதல்வர் இனிவரும் காலங்களில் அவர் மாத்திரை வாங்க வரும் போது உரிய மாத்திரைகள் முறையாக இருப்பு வைத்து கண்டிப்பாக வழங்கப்படும் அல்லது தேதி குறிப்பிட்டு குறிப்பிட்ட அந்த தேதியில் ஆஜராகி மாத்திரைகளை பெற்று கொள்ளுமாறும் அறிவுறுத்துவதற்கு மாறாக மற்றவர்களுக்கு வழங்கும் மாத்திரைகளை இவருக்கு என்று தனியாக ஒதுக்கி வைக்க விதிகளில் இடமில்லை என அப்பாவி இளைஞரிடம் அதிகார தோணியில் எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளார் மருத்துவமனை முதல்வர். இனிவரும் காலங்களில் நோயாளிகளின் தேவைக்கு ஏற்ப மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டு கண்டிப்பாக வழங்கப்படும் என்று கூறுவதே மக்கள் பணியாளரான மருத்துவமனை முதல்வரின் பணி என்பதை மறந்துவிட்டு. தமிழக முதலமைச்சரும் சுகாதரத்துறை அமைச்சரும் இணைந்து மக்களைத் தேடி மருத்துவம் போன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து, மக்களிடம் சுகாதாரத்துறையின் மீதான நன்மதிப்பை அதிகரித்து வருகின்றன சூழ்நிலையில் உரிய நேரத்தில் மாத்திரைகளை வழங்குமாறு கேட்ட இளைஞர் மனம் புண்படும் வகையில் மதுரை இராசாசி மருத்துவமனை முதல்வர் பதிலளித்துள்ளது எங்கள் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அரசு மருத்துவமனை குறித்த தவறான எண்ணத்தை விதைத்துள்ளது. எனவே Mesalamine மாத்திரைகளை பெற தொடர்ந்து அலைக்கழித்த சம்பவங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கோருகின்றோம்.
T செட்டியபட்டி சோலை கல்லூரி அருகில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பவரை உரிய நபரிடமோ அல்லது மனநல காப்பகத்திலோ ஒப்படைக்க சமூக அக்கறையுடன் எட்டு ஊர் இளைஞர் குழு நண்பர்கள் முன்வைத்த கோரிக்கையை ஏற்று உடனடியாக அவரை பெரியகுளம் அரசு மனநல மருத்துவமனை காப்பகத்தில் ஒப்படைக்க முயற்சி எடுத்த காவல் துறையைச் சார்ந்த மரியாதைக்குரிய திரு லிங்கம் CID அவர்களுக்கும் நமது தொட்டப்ப நாயக்கனூர் கிராம நிர்வாக அலுவலர் மதிப்பிற்குரிய திரு சசிகுமார் அவர்களுக்கும் தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் மரியாதைக்குரிய திரு பாலமுருக மகாராஜா அவர்களுக்கும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து மறுவாழ்வு அளிக்கும் M சுப்புலா புரத்தைச் சேர்ந்த மனித நேயர் மாமனிதர் மரியாதைக்குரிய திரு ரஞ்சித் குமார் அவர்களுக்கும் நன்றிகள் பல கோடி நன்றி உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களால் தான் இன்னும் இந்த பூமியில் மனித நேயமும் மனிதமும் வளர்கிறது எல்லாம் வல்ல ஈசனின் இறையருளும் இயற்கை அன்னையின் ஆசீர்வாதமும் கிடைத்து நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் நிம்மதியாக வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறோம்
நேற்று எட்டு ஊர் இளைஞர் குழுவினர் உசிலம்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் DSP உயர்திரு நல்லு ஐயா அவர்களை சந்தித்து நமது செட்டியபட்டி கிராமத்தில் புறக்காவல் நிலையம் அமைத்து தர கோரியும் செட்டியபட்டியில் நடைபெறும் சட்ட விரோத மதுவிற்பனை தடுத்து நம் பகுதி இளைஞர்களை மது பகழக்கத்திலிருந்த மீட்டுத் தரக் கோரிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. நமது ஊர் மீதான இளைஞர்களின் அக்கரையை பார்த்து நம்ம எட்டு ஊர் இளைஞர் குழுவினரை உயர்திரு DSP அவர்கள் வாழ்த்தி நம்பிக்கையும் அளித்தார். இது போன்ற இளைஞர்களின் கூட்டு முயற்சிக்கு பொது செயல்பாட்டுக்கு எப்போதும் காவல்துறை துணை நிற்கும் தொடர்ந்து இளைஞர்கள் இதுபோன்ற நற்செயல்களில் ஈடுபடுமாறு அறிவுரை வழங்கினார். நம்ம எட்டு ஊர் இளைஞர் குழுவினரை போல் வேறு எந்த கிராமத்திலிருந்தும் இது மாதிரியான பொது பிரச்னைகளில் இளைஞர்கள் ஒற்றுமையாக வருவதில்லை அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் தான் காவல் நிலையம் வருவார்கள் ஆனால் நம்ம எட்டு ஊர் இளைஞர் குழுவினர் மட்டுமே ஊரின் நலன் கருதி தொடர்ந்து செயல்படுவது மகிழ்ச்சி மேலும் அங்கிருந்த மற்ற காவல் துறை அதிகாரிகளும் நமக்கு ஊக்கமளித்தனர். எட்டு ஊர் இளைஞர் குழுவினரின் நற்செயல்களுக்கு ஆதரவளித்த உசிலம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களுக்கும் மற்ற காவல் துறை அதிகாரிகளுக்கும் மேலும் நம்ம இளைஞர் குழுவின் நற்செயல்கள் மற்றும் அடுத்த கட்ட முயற்சிகளுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வரும் மதிப்பிற்குரிய லிங்கம் CID அவர்களுக்கும் நம்ம எட்டு ஊர் இளைஞர் குழு மற்றும் பொதுமக்களின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
நேற்று 23.05.25 உசிலம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் உயர்திரு சந்திரசேகர் DSP ஐயா அவர்கள் செட்டியபட்டி பகுதிக்கு கள ஆய்விற்காக வந்த போது அவரிடம் எங்கள் ஊர் இளைஞர்களை மது பழக்கத்திலிருந்த மீட்க ஏதுவாக செட்டியபட்டி மற்றும் குறிஞ்சி நகர் விலக்கு ஆகிய 2 இடங்களில் சட்ட விரோதமாக நடைபெற்று வரும் மது விற்பனையை நிரந்தரமாக தடுத்து நிறுத்திட வேண்டும் என்ற கோரிக்கையினை முன் வைத்தோம். மேலும் எட்டு ஊர் இளைஞர் குழுவின் சமூக செயல்பாடுகள் குறித்தும் விளக்கி கூறினோம்... எட்டு ஊர் இளைஞர் குழுவின் செயல்பாடுகளை கேட்டறிந்த உயர்திரு DSP ஐயா அவர்கள் எட்டு ஊர் இளைஞர் குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும் இது போன்று இளைஞர்களின் கூட்டு முயற்சிக்கும் சமூக செயல்பாடுகளுக்கும் காவல்துறை எப்போதும் துணை நிற்கும் தொடர்ந்து இளைஞர்கள் நேர்மையான முறையில் நற்செயல்களில் ஈடுபடுமாறு கூறியதுடன் கிராம நலன் சார்ந்து பொது பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போது சமூக விரோதிகளால் அச்சுறுத்தல் அல்லது ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் எங்களிடம் தெரிவியுங்கள் என கூறி இளைஞர்களுக்கு ஊக்கமளித்தார்.. இளைஞர்கள் ஒற்றுமையாக செயல்படுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தொடர்ந்து இது போலவே ஒற்றுமையாக செயல்படுமாறு அறிவுரை வழங்கினார்.. உயர்திரு சந்திரசேகர் DSP ஐயாவை போன்ற உயர் பதவியில் இருப்பவர்கள் இளைஞர்களிடம் நீண்ட நேரமாக பசத்துடன் பேசி பாராட்டியது எட்டு ஊர் இளைஞர்களின் மனதில் ஊக்கத்தை ஏற்படுத்தியது.. எட்டு ஊர் இளைஞர் குழுவினரின் நற்செயல்களுக்கு ஊக்கம் அளிக்கும் உசிலம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களுக்கும் உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய அதிகாரிகளுக்கும் எட்டு ஊர் இளைஞர் குழு சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்