ஐயா /அம்மா நாங்கள் செட்டியபட்டியை சுற்றியுள்ள 8 கிராமங்களில் ( நோட்டம்பட்டி, குன்னூத்துப்பட்டி , வாசிநகர்,குறிஞ்சிநகர், ஸ்ரீரங்கபுரம், சேர்வை பட்டி ,நடுப்பட்டி , அண்ணாநகர் ) வாழ்ந்து வருகிறோம் எங்கள் கிராமம் புவியியல் ரீதியாக மதுரை மற்றும் தேனி மாவட்ட எல்லையான ஆண்டிபட்டி கணவாய் மலை சரிவு பகுதியில் 1km தொலைவிற்குள் அமைந்துள்ளது. செட்டியபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள 8 கிராமங்கள் இயற்கையாகவே NH85 தேசிய நெடுஞ்சாலைக்கு தெற்கில் 4 கிராமம் வடக்கில் 4 கிராமம் என பிரிந்தும் அமைந்துள்ளது. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை NH85 ன் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு நெடுஞ்சாலை NH85 ன் தெற்கு பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த குழந்தைகள் அசுர வேகத்தில் செல்லும் வாகனங்களுக்கு இடையே எவ்வித பாதுகாப்பும் இன்றி சாலையை தனியாக தினசரி கடந்து சென்று வருகின்றனர். மேலும் உசிலம்பட்டி மற்றும் ஆண்டிபட்டி ஆகிய நகரங்களுக்கு செல்லும் மக்கள் பேருந்தில் ஏறவும் பேருந்தில் இருந்து இறங்கியும் சாலையை பாதுகாப்பின்றி கடக்க வேண்டியுள்ளது. ஆண்டிபட்டி கணவாயில் உள்ள ரயில்வே கேட் காலை 08 மணி & 09 மணி மற்றும் இரவு 07 மணி & 9 மணி என தினசரி 4 முறை ரயில்கள் செல்வதற்காக அடைத்து ஒவ்வொரு முறை திறக்கப்படும் பொழுதும் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒரே நேரத்தில் மடைதிறந்த வெள்ளம் போல கணவாய் மலை பகுதியில் இருந்து சரிவிலிருக்கும் உசிலம்பட்டியை நோக்கி சீறி பாய்கின்றன இதனால் ரயில்வே கேட்டிற்கு மிக அருகில் உள்ள எங்கள் கிராமத்தில் அடிக்கடி சாலை விபத்துக்கள் நடந்து வருகிறது இதேபோல் ரயில் கிராசிங்கிற்காக தடுத்து நிறுத்தப்பட்டு ஆண்டிபட்டியை நோக்கி செல்லும் வாகனங்களின் வேகத்தை குறைக்க ஆண்டிபட்டி கணவாய் to ஆண்டிபட்டி பேருந்து நிலையத்திற்கு இடைப்பட்ட பகுதியில் 5 இடங்களில் பெரிய அளவு Big size பேரிகாடுகள் அமைக்கப்பட்டுள்ளது.. ஆனால் ஆண்டிபட்டி கனவாய் to உசிலம்பட்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் வாகனங்களின் வேகத்தை குறைப்பதற்கான வழிமுறை மற்றும் நடவடிக்கைகள் எதுவும் இல்லை (குறிப்பு : மதுரை - தேனி மார்க்கத்தில் NH85 ல் செல்லும் தனியார் பேருந்துகள் தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லாத வகையில் அசுர வேகத்தில் சென்று வருகின்றனர் என்பது உலகறிந்த செய்தி) எங்கள் கிராமத்தில் 26.09.24 அன்று காலை 08.30 மணிக்கு ஏற்பட்ட மிக கோரமான வாகன விபத்தால் NH85 தேசிய நெடுஞ்சாலையின் போக்குவரத்து ஸ்தம்பித்ததுடன் இந்த விபத்தில் எங்கள் கிராமத்தை சேர்ந்த இருவர் உயிரிழப்பு 5 பேர் படுகாயம் 2 ஷேர் ஆட்டோ முற்றிலும் நசுங்கியதுடன் 2 வீடுகளின் சுவர் இடிந்து விழுந்தது. இது எங்கள் கிராம பொதுமக்கள், இளைஞர் மற்றும் பள்ளி குழந்தைகள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் கிராமம் ஆண்டிபட்டி கணவாய் சரிவின் 1km தொலைவிற்குள் அமைந்துள்ளது என்பதால் தினசரி வாகன விபத்துகளால் பாதிக்கப்பட்டு வருகின்றோம்.. குறிப்பாக 2023 & 2024 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டும் எங்கள் கிராமத்தில் காவல்துறை பதிவு செய்த 21 பெரிய அளவிலான சாலை விபத்துகளில் மட்டும் 25 உயிரிழப்புகள் மற்றும் 30 நபர்களுக்கு படுகாயங்கள் ஏற்பட்டுள்ளது.. ( உரிய ஆதாரங்கள் இணைப்பு 1ல் ) மற்றும் மேற்குறிப்பிட்ட 2 ஆண்டுகளில் காவல்துறையில் பதிவு செய்யப்படாத சிறிய சாலை விபத்துக்கள் 20க்கும் மேற்பட்டவை... உயிரிழந்தவரின் குடும்பம் நடுத்தெருவில் நிற்கின்றனர் படுகாயம் அடைந்தவர்கள் வாழ வழி தெரியாமல் திகைக்கின்றனர் சாலை விபத்துக்கள் மனித வாழ்க்கையை தலைகீழாக மாற்றி விட்டது.. NH85 தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் எங்கள் கிராமம் அமைந்ததால் தினசரி சாலை விபத்துக்கள் ஏற்படுகிறது. இச்சம்பவங்கள் இப்பகுதியில் வாழும் பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகளிடம் நமது கிராமம் மனிதர்கள் வாழ தகுதியற்ற பகுதியாக மாறிவிட்டதா என்ற எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது.. மேலும் NH85 தேசிய நெடுஞ்சாலை தொண்டி முதல் கொச்சி வரை செல்கிறது இதில் தேனி மாவட்டத்திற்குட்பட்ட கோட்டூர், சீலையம்பட்டி, மற்றும் K.புதுப்பட்டி ஆகிய கிராமங்களில் சாலை விபத்துக்கள் ஏற்படாத வகையில் NH85 தேசிய நெடுஞ்சாலையில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டு வாகனங்களின் வேகம் கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் ஆண்டிபட்டி கணவாய் முதல் ஆண்டிபட்டி பேருந்து நிலையம் வரையிலான மலை சரிவான பகுதியில் 5 இடங்களில் பேரிக்காடுகள் அமைக்கப்பட்டு அதில் 2 இடங்களில் போலீஸ் செக்போஸ்ட்களும் அமைக்கப்பட்டுள்ளது.. எனவே எங்கள் கிராமமான செட்டியப்பட்டியில் குழந்தைகள் பாதுகாப்பாக சாலையை கடந்து பள்ளிக்கு செல்லவும், அடிக்கடி ஏற்படும் சாலை விபத்துக்களை தடுத்திடவும், இனிவரும் காலங்களில் சாலை விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்படாமல் நிறுத்திடவும், T. செட்டியபட்டியில் "வேகத்தடை" அமைத்து "உயிர் பாதுகாப்பு" வழங்குமாறும் மேலும் ஆண்டிபட்டி கணவாய் முதல் உசிலம்பட்டி வரையில் குறைந்தபட்சம் மூன்று இடங்களில் பேரிக்காடுகள் அமைத்து வாகனங்களின் வேகத்தினை குறைத்திடுமாறு சாலை விபத்துகள் ஏற்படும் போது அதனை சுட்டிக்காட்டி சாலையில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தி சாலை மறியல் போன்ற செயல்களில் ஈடுபடாமல் அரசு நிர்வாகத்தின் மீது நம்பிக்கை வைத்து சட்ட விதிமுறைகளை மட்டுமே கடைபிடிக்கும் எட்டு ஊர் இளைஞர் குழு, கிராம பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் சார்பாக கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம்..
It is a long established fact that a reader will be distracted by the readable content of a page when looking at its layout. The point of using Lorem Ipsum is that it has a more-or-less