15/01/24/தமிழர் தைத்திருநாளை முன்னிட்டு இன்று நமது அசுவமனா நதியில் சமத்துவ பொங்கல் வைத்து இயற்கையின் பஞ்சபூதங்களை வழிபட்டு விவசாயம் செழித்திட ஒவ்வொரு ஆண்டும் இயற்கை அன்னை மழை பொழிவை கொடுத்து நமது அசுவமனா நதி அணை தொடர்ச்சியாக நிரம்பி விவசாயப் பெருங்குடி மக்கள் வாழ்வு செழித்திட நம் பகுதிக்கு குடிநீர் பிரச்சனை வராமல் காத்திட நிலத்தடி நீர் பெருகிட எட்டு ஊர் இளைஞர் குழுவினர் இயற்கை அன்னைக்கு அசுவமணா நதிக்கரையில் சமத்துவ பொங்கல் வைத்து மலர் தூவி இயற்கை அன்னையையும் வாசிமலையானின் அருளை பெற்றனர்🙏
இன்று 20/09/24 நடைபெற்ற மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் நம் பகுதியின் இயற்கைக்கும் நீர் நிலைகளுக்கும் பெரும் அரணாக இருக்கும் அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு மாநில கௌரவத் தலைவர் விவசாயிகளின் தோழன் திரு MP ராமன் அவர்களிடம் நம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அசுவமாநதி அணையில் சீமை கருவேலை மரங்களை அகற்றி தூர்வாரி வரத்து கால்வாய் சீரமைக்கவும். வாசிநகர் பகுதியில் விவசாயிகளுக்கு அடிக்கடி ஏற்படும் மின்சார பிரச்சனைக்கு (டிரான்ஸ்பார்மர்) நிரந்தர தீர்வு காண அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு எட்டு ஊர் இளைஞர் குழுவினர் மற்றும் கிராம பொது மக்களின் கோரிக்கையை இன்று மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்🙏🙏 குரலற்றவர்களின் குரலாய் ஒலிக்கும் திரு MP ராமன் ஐயா அவர்களுக்கு எட்டு ஊர் இளைஞர் குழு மற்றும் கிராம பொதுமக்கள் சார்பாக மனமார்ந்த நன்றி நன்றி ஐயா🙏
ஒன்று கூடுவோம் வென்று காட்டுவோம்
🌾🌳தைத்திருநாளை முன்னிட்டு இயற்கை வளம் பெற்று விவசாயம் செழித்திட வேண்டி நேற்று மாலை நோட்டம்பட்டி விநாயகர் கோவிலில் எட்டு ஊர் இளைஞர் குழு சார்பாக சமத்துவ பொங்கல் வைத்து தமிழர் திருநாள் கொண்டாடப்பட்டது. மேலும் இந்நாளில் அசுவமாநதி அணைக்கு முல்லைப் பெரியாறு கால்வாயில் இருந்தோ (அ) மூல வைகை ஆற்றில் இருந்தோ (58 கால்வாய் திட்டத்தை போல்) ஏத்தகோவில் வழியாக புதிதாக ஒரு கால்வாய் அமைத்து அசுவமாநதி அணைக்கு தண்ணீர் கொண்டு வர வேண்டுமெனவும். மேலும் அசுவமாநதி அணையில் இருந்து பாண்டி கோவில் வழியாக புதிதாக ஒரு கால்வாய் அமைத்து T செட்டியபட்டி நோட்டம்பட்டி இடையபட்டியில் உள்ள நிலங்களுக்கு நீர் பாசன வசதி அமைத்து தருமாறும் தேனி பாராளுமன்ற உறுப்பினரை சந்தித்து வருகின்ற 21/01/25 அன்று கோரிக்கை வைக்க பொதுமக்கள் மற்றும் எட்டு ஊர் இளைஞர்கள் சார்பாக ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது...
நமது அசுவமனா நதி முழு கொள்ளளவும் நிரம்பி மறுகால் பாய்கிறது இந்த மகிழ்ச்சியான தருணத்தில் ஒவ்வொரு ஆண்டும் இதைப்போல நமது இயற்கை அன்னை மழை பொழிவை கொடுத்து நமது அசுவமனா நதி அணை தொடர்ச்சியாக நிரம்பி விவசாயப் பெருங்குடி மக்கள் வாழ்வு செழித்திட நம் பகுதிக்கு குடிநீர் பிரச்சனை வராமல் காத்திட நிலத்தடி நீர் பெருகிட நம்ம 8 ஊர் இளைஞர் குழுவினர் இயற்கை அன்னைக்கு அசுவமணா நதி நதிக்கரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு இயற்கை அன்னைக்கு அசுவமான நதிக்கரையில் பொங்கல் வைத்து மலர் தூவி வழிபட்டனர்.
பங்களிப்பு : பொங்கல் சாமான் நாகராஜ் HDFC bank பூஜை பொருள் மணிமுத்து GR டிராவல்ஸ்