About

  • Home
  • Watter Management
Event
  • 21/07/23 உசிலம்பட்டி தாலுகா தொட்டப்ப நாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட T குன்னூத்துபட்டி கிராமத்திற்கு அருகில் உள்ள வாசிமலையான் மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் அசுவமாநதி அணை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தூர் வாராமல் பராமரிப்பின்றி சீமை கருவேளை முட்புதர்கள் மண்டி இருப்பதால் மழை காலங்களில் கிடைக்கும் நீரை தேக்க முடியாத சூழ்நிலை மழைக்காலங்களில் வரும் நீர்கள் அனைத்தும் உடனடியாக வெளியேறி விடுகின்றது இந்த அசுவமான நதி அணையை தூர்வாரி அதனின் கிளை கால்வாய்களையும் பராமத்து பணி செய்தும் அடர்ந்து நிற்கும் சீமை கருவேலை புதர்களை அகற்றி விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் அந்தப் பகுதி விவசாயங்கள் மிகவும் செழிப்படையும் மற்றும் நதியை சுற்றியுள்ள கிராமத்தின் குடிநீர் பிரச்சனை வராமல் பார்த்துக் கொள்ளலாம் ஐயா மேலும் உசிலம்பட்டி பகுதிகளில் பெரிய சிறிய சுற்றுலா தளங்கள் இல்லாத பெரிய குறையை இயற்கை சூழலோடு மலையடிவாரத்தில் அமைந்திருக்கும் அசுவமனா நதி அணை அருகில் உள்ள அடர்வனத்தில் ஒரு சிறுவர் பூங்கா அமைத்துக் கொடுத்தால் பொழுதுபோக்கு அம்சமாகவும் அமைத்து கொள்ள ஒரு சிறந்த இடமாக இருக்கும் ஐயா எனவே அசுவமனா நதி அணையை தூர்வாரி கிளை கால்வாய்களை பராமத்து பணி செய்தும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.